📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 06, 2026 11:02 PM

மேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு; 10 ஆயிரம் கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு; 10 ஆயிரம் கனஅடியாக உயர்வு

சேலம்: பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் வரும் போது, ஆண்டுதோறும் பாசனத்திற்காக நீர் திறப்பது வழக்கம். இதனால், 13 டெல்டா மாவட்டங்களில் 17.10 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். ஆனால், இந்தாண்டு போதிய மழை மற்றும் கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறக்கப்படாததால், ஜூன் மாதம் திறக்க வேண்டிய நீர் திறக்கப்படவில்லை.

அதன்பிறகு, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் கர்நாடகா அணைகளில் இருந்து நீர்திறப்பு போன்றவையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியது. இதையடுத்து, செப்டம்பர் 1ம் தேதி பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் விஜய் நீரை திறந்து வைத்தார். முதற்கட்டமாக 3000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், பாசன தேவை கருதி, படிப்படியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவையைக் கருதி, மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியில் இருந்து 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.