📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 18, 2026 09:30 PM

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தனித்தன்மையுடன் இயங்குகிறது

வேற்றுமையில் ஒற்றுமை

நாட்டுப்பற்று

இந்திய–சீன போர்', 'வங்கதேச விடுதலை போர்', 'கார்கில் போர்', 'குஜராத் நிலநடுக்கம்' என நம் நாடு சந்தித்த ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும், தமிழர்கள் தங்களுடைய நாட்டுப்பற்றை வேறெந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் குறைவில்லாத வகையில் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தி மொழி திணிப்பு வேண்டாம்

முதலிடம் வகிக்கிறது

வளர்ச்சி இன்ஜின்

எனவே, இந்தி தெரியாததால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பின்னடைவை சந்திக்கவில்லை; மாறாக, தமிழ்நாடு மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறப்பான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக தமிழ்நாடு விளங்குகிறது.

தரமான கல்வி வழங்கப்பட்டுவருகிறது

நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், முந்தைய திராவிட மாடல் அரசின் சார்பில் உறுதியான வாதங்களை எடுத்து வைத்தோம். அரசியலமைப்பு சட்டத்தில், கல்வி ஒத்திசைவு பட்டியலில் இடம் பெற்றுள்ளதால், மத்திய அரசின் கொள்கைகளை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை. தமிழ்நாட்டில் ஏற்கனவே மாதிரி பள்ளிகள் எனும் உண்டு-உறைவிட பள்ளிகள் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளிலும் சிறந்த முறையில் வெற்றிபெற்று, நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், நவோதயா பள்ளிகளுக்காக தனியாக இடம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. நவோதயா பள்ளிகளுக்கு அளிக்கும் நிதி நிலையை தமிழ்நாடு அரசிடம் அளித்தால், தற்போது நம்மிடம் உள்ள கட்டமைப்பை கொண்டே சிறப்பாக செயல்பட முடியும்.

3,548 கோடி நிலுவை தொகை

மேலும், மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே, 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 3,548 கோடி ரூபாயை மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அந்த நிதியை விடுவிக்க வேண்டும் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தோம்.

மகிழ்ச்சியளிக்கிறது

தனி தீர்மானம்

தடுத்து நிறுத்துவோம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.