📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 12, 2026 08:36 PM

IND vs AFG: கம்பீர் ரொம்ப ஆக்கோரஷமாக இருப்பார்.. தொடக்க ஜோடி பற்றி முடிவு எடுக்கல

IND vs AFG: கம்பீர் ரொம்ப ஆக்கோரஷமாக இருப்பார்..  தொடக்க ஜோடி பற்றி முடிவு எடுக்கல

IND vs AFG: கம்பீர் ரொம்ப ஆக்கோரஷமாக இருப்பார்.. தொடக்க ஜோடி பற்றி முடிவு எடுக்கல- ஸ்ரேயாஸ் ஐயர்

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டிக்கான தொடக்க வீரர்களின் நிலை குறித்து இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி, டி20 உலகக் கோப்பை வென்ற தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய மூவரில் இருந்து இரண்டு சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் இந்திய அணிக்கு கடுமையான சவால் நிலவி வருகிறது.

அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சோபிக்கத் தவறியதால் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, அடுத்த மூன்று போட்டிகளில் விளையாடவில்லை. எனினும், சூர்யவன்ஷி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் எடுக்கத் தவறியதால், இறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மாவின் தொடக்க ஜோடியாக சாம்சன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், ஜிம்பாப்வேக்கு எதிரான சமீபத்திய டி20 தொடரில் சாம்சன் அணியில் சேர்க்கப்படவில்லை. அபிஷேக் மற்றும் சூர்யவன்ஷி ஆகியோரே அனைத்துப் போட்டிகளிலும் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர்.

முதல் போட்டியில் களம் இறங்கப்போகும் தொடக்க வீரர்கள் குறித்த இந்த விவாதம் குறித்துப் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், "அபிஷேக், சஞ்சு மற்றும் சூர்யவன்ஷி ஆகிய மூவரும் அணியில் இருப்பது எங்களுக்குக் கிடைத்த கூடுதல் பலம். அவர்கள் தங்களது பொறுப்புகளில் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இறுதி முடிவு எடுப்பது கடினமாக இருக்கும். யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அது அணியின் நன்மைக்காகவே இருக்கும்" என்று கூறினார்.

மேலும், "வெளியில் அமர்ந்திருக்கும் வீரர்களுடன் நானும் பயிற்சியாளரும் கலந்துரையாடி அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவது முக்கியம். அவர்களுக்குரிய நாள் வரும்போது நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

அபிஷேக் சர்மா தொடர்ந்து தொடக்க வீரராகக் களம் இறங்கி வரும் நிலையில், சாம்சன் மற்றும் சூர்யவன்ஷி மாறி மாறி வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இருப்பினும், இடதுகை பேட்டரான அபிஷேக் சர்மா தற்போது மோசமான ஃபார்மில் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து அவர் விளையாடிய கடைசி ஆறு டி20 இன்னிங்ஸ்களில் அவரது சராசரி வெறும் 6.66 ஆக மட்டுமே உள்ளது.

"கௌதம் கம்பீர் எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர். வீரர்களைத் தனிப்பட்ட முறையில் சிறப்பாகக் கையாள்வதில் அவர் வல்லவர். ஐபிஎல் தொடரில் நான் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளதால், அவரது சிந்தனை முறை எனக்கு நன்றாகத் தெரியும். மைதானத்தில் இறங்கும்போது அவர் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுவார் மற்றும் ஒவ்வொரு முறையும் வெற்றி பெறவே விரும்புவார்," என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.