📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 15, 2026 12:30 AM

தமிழகம் மற்றும் புதுச்சேரி இடைத்தேர்தல்: தபால் ஓட்டுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

தமிழகம் மற்றும் புதுச்சேரி இடைத்தேர்தல்: தபால் ஓட்டுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தபால் ஓட்டு வசதி நடைமுறையில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் ஓட்டு வசதியை பயன்படுத்தி வாக்களிக்கலாம். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்ளிட்டோருக்கும் தபால் ஓட்டு வசதி வழங்கப்படுகிறது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குறிப்பிட்ட விதிமுறைகளின்படி தபால் ஓட்டு வசதி வழங்கப்பட்டது.

இடைத்தேர்தலிலும் தொடரும்