📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 19, 2026 01:33 PM

ஆசிய போட்டி இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜெர்சியில் சிக்கல்..சொந்த செலவில் ஹோட்டலில் தங்கவைத்த பிசிசிஐ

ஆசிய போட்டி இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜெர்சியில் சிக்கல்..சொந்த செலவில் ஹோட்டலில் தங்கவைத்த பிசிசிஐ

ஆசிய போட்டி இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜெர்சியில் சிக்கல்..சொந்த செலவில் ஹோட்டலில் தங்கவைத்த பிசிசிஐ

மும்பை: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஜப்பானின் நகோயா நகருக்கு புறப்படுவதற்கு முன்னதாக, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியினருக்கு சரியான அளவிலான ஜெர்சி கிடைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்திய கிரிக்கெட் அணியினர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காகப் புறப்பட உள்ள நிலையில், சில வீரர்களுக்கான ஆடைகளில் அளவுப் பிரச்சினைகள் இன்னும் முழுமையாகச் சரிசெய்யப்படவில்லை. பிசிசிஐ மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சரான 'ஜேஎஸ்டபிள்யூ இன்ஸ்பயர் நிறுவனத்திற்கு இடையே இது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தலைநகர் டெல்லியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜப்பானுக்குப் புறப்படத் திட்டமிட்டுள்ளது. ஜப்பானுக்கு எதிராகச் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடும் போது, இந்திய வீரர்கள் தங்களின் வழக்கமான ஆடைகளை அணிவார்கள். அதன் பின்னர், செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டகளின் போது அதிகாரப்பூர்வ ஆசிய விளையாட்டு ஜெர்சிக்கு மாறுவார்கள்.

இது குறித்து பேசிய இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் "கிரிக்கெட் வீரர்களின் ஆடைகளில் அளவுப் பிரச்சினைகள் இருந்தது உண்மைதான். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள சில வீரர்களுக்கான ஆடைகளும் விரைவில் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். வீரர்கள் இரு வேறு தொடர்களுக்கான ஆடைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளதால், இதுபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளன.

இதனிடையே, நகோயாவில் உள்ள தங்குமிடங்களில் பிற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, ஆண்கள் கிரிக்கெட் அணிக்காகத் தனது சொந்த செலவில் ஹோட்டல் ஏற்பாடுகளைச் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அத்துடன் அங்குள்ள விளையாட்டு மைதானம் மற்றும் இதர வசதிகள் குறித்தும் சில கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

மறுபுறம், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தங்குமிடத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால், ஆண்கள் அணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைகள் மிகவும் சிறியவை, அங்கு அவர்களின் கிட் பேக்குகளைக் கூட வைக்க இடமிருக்கவில்லை. அந்தப் பகுதியில் பெரிய ஹோட்டல்கள் அதிகம் இல்லை என்றாலும், வீரர்கள் ஜப்பானுக்குப் புறப்படுவதற்கு முன்பாகவே பிசிசிஐ தனது சொந்த தங்குமிட ஏற்பாடுகளை செய்து முடித்துவிட்டது.