நேபாளம் பெருவெள்ளம்: 4,858 பேரின் கதி என்ன?
காத்மாண்டு,
நேபாளம் பெருவெள்ளம்
நேபாளத்தின் போடேகோஷி நதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் முற்றிலும் நாசமாகிவிட்டன. இமயமலையில் இருந்து அடித்து வரப்பட்ட பாறைகள், சேறு, சகதி அனைத்தும் சுமார் 8 மாவட்டங்களை நிறைத்து இருக்கின்றன.
கிராமங்கள் மற்றும் நகரங்கள் என ஆற்றின் போக்கில் இருந்த பகுதிகள் அனைத்தும் சேறு சகதியால் நிறைந்து காணப்படுகின்றன. வரலாறு காணாத இந்த பேரிடரில் சிக்கிய ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மரபணு சோதனை
நேபாளம் மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் துணையுடன் நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளின்போது அடுத்தடுத்து உயிரிழந்தோரின் உடல்கள் சிக்கி வருகின்றன. இதில் நேற்று வரை 1,222 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் தோண்ட தோண்ட உடல்கள் சிக்கி வருவதால் பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது.
4,858 பேரின் கதி என்ன?
எனவே அவர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வரு கின்றன. இந்தப்பணிகளில் போலீசார், ராணுவ வீரர்கள் என சுமார் 8 ஆயிரம் பேர் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் மாயமானவர்களை தேடுவதுடன், சேதமடைந்த சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு உள்ளனர்.
பேரிடரில் சிக்கியவர்கள் தொடர்ந்து பிணமாக மீட்கப்படுவதும், மாயமான ஆயிரக்கணக்கானோரை பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்காமல் இருப்பதும் நேபாளம் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.