தோட்டத்தில் புலி உலா வருவதுபோல் ஏ.ஐ. வீடியோ வெளியீடு
தோட்டத்தில் புலி
கர்நாடக மாநிலம் கொப்பல்(மாவட்டம்) டவுன் பகுதியில் உள்ள காவலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈரண்ணா(வயது 25). இவருக்கு சொந்தமாக வனப்பகுதியை ஓட்டி தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்துக்கு வேலைக்கு செல்லுமாறு ஈரண்ணாவின் குடும்பத்தினர் அவரை வற்புறுத்தி வந்தனர்.
சமூக வலைதளத்தில் பரவியது
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினரும் தோட் டத்தில் புலி நடமாட்டம் இருப்பதாக நம்பி இருந்தனர். இதற்கிடையே இதுகுறித்து கிராமமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஈரண்ணாவின் தோட்டத்துக்கு விரைந்து வந்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புலியின் கால் தடங்கள் கிடைக்காததால், ஈரண்ணாவை அழைத்து வனத்துறையினர் விசாரித்தனர்.
நூதன தண்டனை
அதாவது ஈரண்ணாவை தோட்டத்துக்கு அழைத்து சென்று கிராமமக்கள் முன்னிலையில் 50 தோப்பு கரணம் போட வைத்தனர். இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் கண்டித்து அனுப்பி வைத்தனர். ஈரண்ணா தோப்புக்கரணம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.