Tamil Nadu
September 18, 2026 12:34 PM
தீவிர சிகிச்சையில் கொளத்துார் எம்.எல்.ஏ., பாபு
சென்னை: சென்னை கொளத்துார் தொகுதி த.வெ.க., -- எம்.எல்.ஏ., பாபு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரலில் சளி அடைப்பு இருப்பதால், தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பல்துறை மருத்துவ குழுவின் தொடர் கண்காணிப்பில் எம்.எல்.ஏ., பாபு உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சைகளுக்கு உடல் ஒத்துழைப்பு தருகிறது. உடல்நிலை முன்னேற்றத்தை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu