📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 15, 2026 06:31 PM

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்தது! வேட்பாளர்களை அறிவித்த இடதுசாரிகள் !

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்தது! வேட்பாளர்களை அறிவித்த இடதுசாரிகள் !

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்தது! வேட்பாளர்களை அறிவித்த இடதுசாரிகள் !

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் இடதுசாரிகள்; சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. இதையடுத்து, இரு தொகுதிகளுக்கான தங்களது வேட்பாளர்களை இடதுசாரி கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

கூட்டணியின்றி களமிறங்கும் இடதுசாரிகள் :

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள், தற்போது எந்த அரசியல் கூட்டணியிலும் இடம்பெறாமல் தனித்துப் போட்டியிடுகின்றன.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தங்களது சொந்த பலத்தை அடிப்படையாக கொண்டு தேர்தலை சந்திக்க இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் :

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளும் காலியானதையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர் அறிவிப்பு :

மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் சுகந்தி போட்டியிடுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக செயல்பட்டு வரும் சுகந்தியின் பெயரை கட்சி தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது.

அதேபோல், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் லட்சுமணன் களமிறங்குகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளராக உள்ள லட்சுமணன், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பலமுனைப் போட்டியாக மாறும் தேர்தல் களம் :

இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் மீண்டும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி' ஆதரவு அளித்து வருகிறது.

இதனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தொகுதிகளில் பலமுனைப் போட்டி உருவாகியுள்ளது. இந்த நிலையில், இடதுசாரிகளின் தனித்துப் போட்டி தேர்தல் களத்தில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.