Singapore Tamil
September 01, 2026 02:05 PM
இந்தியா
இந்தியா - சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
சிங்கப்பூர்: நான்காவது இந்தியா - சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசை சந்திப்பு சிங்கப்பூரின் ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில், ஒன்றிய வௌியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணையமைச்சர ஜிதின் பிரசாதா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, தொலைத்தொடர்பு, ஒலிபரப்பு, கடல்சார் பாரம்பரியம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
தொடர்புடைய செய்திகள்
Singapore Tamil